சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருப்பல்லாண்டு

Back to Top
சேந்தனார்   திருப்பல்லாண்டு  
9.029   சேந்தனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=6hE5FaTnKMk

9.029 சேந்தனார் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. 

[1]
மிண்டு மனத்தவர் போமின்கள்
   மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
   செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
   ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
   பல்லாண்டு கூறுதுமே. 

[2]
நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
   நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
   திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
   அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[3]
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
   தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
   சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
   விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[4]
புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்
   டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
   கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
   கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
   பல்லாண்டு கூறுதுமே.

[5]
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
   எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
   மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
   அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.

[6]
சீரும் திருவும் பொலியச் சிவலோக
   நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
   தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
   உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.

[7]
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
   கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
   புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
   வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.

[8]
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
   பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
   மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
   பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[9]
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
   வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
   போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
   தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[10]
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
   எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
   மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
   மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே. 

[11]
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
   அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
   இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
   திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
   பல்லாண்டு கூறுதுமே. 

[12]
எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
   தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
   அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
   தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
   பல்லாண்டு கூறுதுமே. 

[13]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool